புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமக்குத் தாமே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக மரணமான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த ச.தர்சினி வயது 18 என்ற தாயே மரணமானவராவார்.

இவர் வயிற்றில் ஏழு மாதக்குழந்தையும் இவருடன் சேர்ந்து எரிந்து மரணமாகியுள்ளது.

கடந்த 24ம் திகதி வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகறாறின் போது இருவரும் தீ மூட்டி எரிந்துள்ளனர்.

இதன் பின்னர் இருவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி மனைவி மரணமாகியுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கணவன் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top