புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு வங்க மாநிலத்தில் விவகாரத்து கேட்ட மனைவியை சட்டத்தரனிகள் முன்பு, கணவனே அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.மேற்கு வங்க மாநிலம், பரசட்டை சேர்ந்த பிரசாந்த்ஜித் மாஜிக்-ஜெயந்தி என்ற ஜோடி காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம்
செய்துகொண்டனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இவர்களது திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை.

இந்நிலையில் இருவரும் விவகாரத்து கோரி பரசட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த விவகாரத்து மனு, நேற்றுதான் முதன் முறையாக வந்தது.

இருவரும் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சட்டத்தரனிகள் அறைக்குள் ஜெயந்தி சென்றுவிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த கணவர் பிரசாந்த்ஜித் அந்த அறைக்குள் சென்று, அரிவாளால் ஜெயந்தியின் தலையில் வெட்டினார்.

சட்டத்தரனிகள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் மீண்டும் ஜெயந்தியை வெறிபிடித்தார்போல் அவர் வெட்டினார். இதையடுத்து அங்கு இருந்த நீதிமன்ற பணியாளர் ஒருவர் துணிச்சலுடன் பிரசாந்த்ஜித்தை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் ஜெயந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பொலிஸார் பிரசாந்த்ஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top