புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் சவுதி அரேபியாவின் இளவரசரான நயிப் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் இன்று மரணமடைந்தார்.சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி முறை நிலவி வருகிறது. இந்நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து
வந்த நயிப் பின் அப்துல் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காகவும், மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்வதற்காகவும் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றார்.

கடந்த 3ஆம் திகதி அன்று இளவரசர் உடல்நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சவுதி அரசு அறிவித்திருந்தது.

ஆனால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக அல் அரேபியா என்ற தொலைகாட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இவருக்கு 77 அல்லது 78 வயது இருக்கலாம். சவுதி அரசின் அடுத்த மன்னராக பதவியேற்கும் நிலையில் இருந்த நயிப் இறந்ததை அடுத்து, அவரது தம்பியும் ரியாத் மாகாண கவர்னருமான சல்மான் அடுத்த இளவரசராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top