புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


15 வயது சிறுமியை விடுதியொன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.


கண்டி, பேராதனை, கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

இந்தச் சிறுமி தனது காதலனுடன் விடுதியொன்றுக்குச் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் தனது நண்பர்களுக்கு சிறுமியை விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பேராதனை, எலிஓய, புஸ்ஸெல்லாவா, கடுவன ஆகிய பிரதேசங்களில் விடுதிகளுக்கு சிறுமி கொண்டுசெல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுளு;ளார்.

சிறுமியின் தாயார் காவல்துறைக்குச் செய்த முறைப்பாட்டிற்கமைய, முதல் மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர், பின்னர் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய ஏனையவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top