புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின்போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அலெக்ஸ பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.
நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷுட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top