புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அபுதாபியில் ஒருவயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக வேலைக்காரப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆசியாவைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. ஒரு அரேபியரின் வீ்ட்டில் அவர் வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று அந்த வீட்டுக்காரரும், அவரது மனைவியும் வெளியே
போன பின்னர் அந்தக் குழந்தையை கீழே படுக்க வைத்து அவன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பாலியல் பலாத்காரத்தில் இப்பெண் ஈடுபட்டுள்ளாள்.

அப்போது அந்தக் குழந்தை கதறி அழுதுள்ளது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத அப்பெண் குழந்தையை அடித்துள்ளார். பின்னர் தலையணையை எடுத்து குழந்தையின் வாயில் அமுத்தி அடக்கப் பார்த்துள்ளார்.

இந்த செயல்கள் அனைத்தும் வீட்டில் இருந்த ரகசியக் கேமராவில் பதிவாகி விட்டது. அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் குழந்தையை நாசப்படுத்திய காட்சியை பெற்றோர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதை கோர்ட், அப்பெண்ணுக்குப் போட்டுக் காட்டியபோது நான்தான் இதைச் செய்தேன் என்று அப்பெண் ஒப்புக் கொண்டார்.

அந்தப் பெண்ணுக்கு விசாரணை முடிவில் 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top