புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனைவியை கொன்று உடலை வேக வைத்து தடயங்களை மறைத்த தலைமை சமையல்காரருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் டேவிட் வீன்ஸ் (49). சமையல்காரர். இவரது மனைவி டான் (39). நகரில் தனியாக ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தார் டேவிட்.
கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ரெஸ்டாரன்டில் கணிசமான பணம் காணாமல் போனது. மனைவி மீது சந்தேகப்பட்ட டேவிட் தகராறு செய்தார்.
அன்று இரவு வீட்டில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்து மனைவியை கட்டிப்போட்டார். வாயில் டேப் சுற்றி தரையில் கிடத்திவிட்டு உறங்கி விட்டார்.
மறுநாள் எழுந்து பார்த்த போது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து டேவிட் அதிர்ச்சி அடைந்தார். பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை பெரிய டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றினார்.
உடல் மூழ்குவதற்கு அதன் மீது எடை வைத்தார். பின்னர் தண்ணீரை கொதிக்க விட்டார். தொடர்ந்து 4 நாட்கள் சிறிது சிறிதாக மனைவியின் உடலை வேக வைத்து அப்புறப்படுத்தினார். ஆனால், மண்டை ஓடு மட்டும் அப்படியே இருந்தது.
இதற்கிடையில் மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து டானை தீவிரமாக தேடி வந்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் டேவிட் மீது சந்தேகம் வந்தது.
வீட்டில் சோதனை நடத்திய போது, டான் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக டேவிட்டை தேடினர். போலீசுக்கு உண்மை தெரிந்து விட்டதை அறிந்த அவர், கலிபோர்னியாவுக்கு தப்பி சென்றார்.
போலீசுக்கு பயந்து மலையில் இருந்து குதித்து விட்டார். படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டான் கொலை வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் நடந்தது.
அப்போது உண்மையை ஒப்புக் கொண்டார் டேவிட். இதையடுத்து அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top