புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் ஆறு வயது சிறுமியை ஐம்பத்தி இரண்டு வயது முதியவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை நான்கு மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக
பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இனிப்புப் பண்டம் தருவதாகக் கூறி குறித்த சிறுமியை அழைத்துச் சென்ற முதியவர் அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவருகிறது.

சந்தேகநபரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top