புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனிதப் பெண்கள் பொதுவாக மனிதக் குழந்தைகளையே பிரசவிப்பார்கள்.ஆனால் மனிதக் குழந்தைகள் என்று சொல்ல முடியாத ஜீவராசிகள் மனிதப் பெண்களில் சிலரால் உண்மையிலேயே பிரசவிக்கப்பட்டுத்தான் உள்ளன.


மனிதப் பெண் ஒருவர் குதிரையை பிரசவித்து உள்ளார் என்பது நம்ப முடியாத உண்மைதான்.நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இது நடந்து உள்ளது.

10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை பேறு கிட்டாத பெண் ஒருவர் தேவாலயத்துக்கு சென்று பாதிரியாரிடம் தீர்வு கோரினார் என்றும் பாதிரியார் எண்ணெய்யால் பெண்ணுக்கு அபிஷேகம் செய்த பின்னர் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றும் பெண்ணுக்கு பிறப்புறுப்பு பகுதிக்குள் இருந்து இரத்தப் பெருக்கு ஆரம்பித்தது என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்கள்.

இச்சம்பவத்துக்கு சாட்சியாக மருத்துவ தாதி ஒருவர் உள்ளார்.

பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதிக்குள் இருந்து வித்தியாசமான ஜந்து ஒன்று வெளியில் வந்து விழுந்தது என்றும் பெண் மயங்கி விட்டார் என்றும் பிரசவிக்கப்பட்ட ஜந்து ஒரு ஆடு என்று சிலரால் கூறப்பட்ட போதிலும் உண்மையில் அது ஒரு குதிரை என்றும் ஏனென்றால் கழுத்து, காதுகள் என்பன நீளமானவையாக காணப்பட்டன என்றும் மருத்துவ தாதி சொல்லி உள்ளார்.

தேவாலாயத்தில் வழிபாடுகளை அடுத்து சிலர் வாந்தி எடுத்தபோது விசித்திரமான பொருட்கள் வெளியில் வந்துதான் உள்ளன, ஆனால் இது போல் முன்பு இடம்பெற்று இருக்கவில்லை என்று பாதிரியார் தெரிவித்து உள்ளார்.

எவரும் சிசுவுக்கு அருகில் செல்லக் கூடாது என பாதிரியார் எச்சரித்தார். சிசு அங்கேயே போடப்பட்டு கிடந்தது. பெண் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குதிரைக் குழந்தை பிறந்து இறந்ததா? இறந்து பிறந்ததா? என்பது தெரியவில்லை. மறுநாள் தேவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டது.

குதிரைக் குழந்தையின் புகைப்படங்களே காட்டப்பட்டு உள்ளன. புகைப்படங்களில் மோசடி எதுவும் கிடையாது.

இதே போல சவூதி அரேபியாவில் சாதாரண பெண் ஒருவருக்கு பாம்புக் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. பாம்பு ஒன்றை பிரசவிக்கின்றாரென முதல் நாள் பெண் கனவு கண்டு இருக்கின்றார். கனவை மற்றவர்களுக்கும் சொல்லி இருந்தார். குழந்தை பிரசவிக்கப்பட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பெண் முன்கூட்டியே சொல்லி இருந்தபடி பாம்புக் குழந்தைதான் பிறந்து இருந்தது. ஓரளவு பச்சை நிற தோலையும், பயங்கரமான சிவப்புக் கண்களையும் குழந்தை கொண்டிருந்தது.
இதே போல எலிக் குழந்தையை பிரசவித்த தாய் ஒருவரும் உள்ளார். 12 மாத கர்ப்பத்தை தொடர்ந்து பிரசவ வேதனை ஏற்பட்டு இருக்கின்றது. பிறந்த குழந்தை தோற்றத்தில் எலி போல உள்ளது. பிறந்து சில நிமிடங்களில் இறந்து விட்டது. இருப்பினும் பிரசவித்த தாய் யார்? எங்கே நடந்தது? போன்ற விபரங்கள் வெளிப்படுத்தப்படாமல் உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top