புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போதையுடன் காரை இயக்கி, இரண்டு பேர் இறப்புக்கு காரணமான பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.மும்பையைச் சேர்ந்த நூரியா ஹவெலி வாலா என்ற இந்த பெண் பியூட்டி பார்லர் உரிமையாளர் ஆவார்.


கடந்த 2010ம் ஆண்டு மது அருந்தி விட்டு தன் பியூட்டி பார்லரிலிருந்து காரில் நூரியா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் "மரைன் டிரைவ்" என்ற இடத்துக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்ற பொலிஸ் வாகனம் மீது பலமாக மோதியதில் பொலிஸ்காரர் ஒருவரும் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.

நூரியா மீது மது குடித்து வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில் போதையுடன் கார் ஓட்டி இரண்டு பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த நூரியாவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top