புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மன்னார் மூர் வீதியில் 67 வயதான முதியவர்  ஒருவர் 7 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேற்படி சிறுமி மிகவும் கோரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார். இக்கொடூரச் சம்பவம் கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தொடர்பில் அவரது குடும்பத்தார் நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான 67 வயது முதியவரை கைது செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top