விசித்திர பூசை ஒன்றில் தொண்டைக்குள் கத்தி செலுத்தப்பட்டு 15 வயதுச் சிறுமி ஒருத்தி அம்பாறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தெய்யத்தகண்டியில் உயிர் இழந்து உள்ளார்.
சாமியாடிய ஒரு தம்பதிதான் இவரது தொண்டைக்குள் கத்தியை செலுத்தியது.
பொலிஸார் சம்பவத்தை கேள்விப்பட்டு வந்து இத்தம்பதியை கைது செய்து உள்ளனர்.
அத்துடன் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டும் உள்ளார்கள்.
07 வயதுச் சிறுமி ஒருத்தியை இத்தம்பதி பூசை ஒன்றின்போது நெருப்பில் போட்டது. சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். 19 வயது இளைஞன் ஒருவரும் காயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டி உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக