புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் நந்தினி வீட்டுக்கு போகாதே… செல்வத்தை மிரட்டிய டிவி ரசிகைகள்!
திருமதி செல்வம்' சீரியல் படப்பிடிப்பிற்குச் சென்ற அர்ச்சனாவின் ரசிகைகள் பலரும் செல்வத்தை சூழ்ந்து கொண்டு மிரட்டல்
விடுத்தனர். இனிமே நந்தினி வீட்டுக்குப் போகதே... அவளை மறந்திடு என்று அன்பு(!) கட்டளையும் போட்டுள்ளனர்.

சன் டிவியில் தினசரி இரவு 8 மணியானால் போதும் திருமதி செல்வம் என்ற சீரியல் பார்க்க உட்கார்ந்து விடுகின்றனர் இல்லத்தரசிகள். 1300 எபிசோடுகளை நெருங்கும் திருமதி செல்வம் சீரியலில் செல்வமாக சஞ்சீவ், அர்ச்சனாவாக அபிதா நடிக்கின்றனர்.



செல்வம் மாறியது ஏன்?

ஏழையாக இருந்தவரை மனைவி அர்ச்சனா சொன்னதை கேட்டு நடந்த செல்வம் இப்போது பணக்காரன் ஆன உடன் தன் தோழி நந்தினியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டான். இது இல்லத்தரசிகளுக்கு பொறுக்கவில்லை.

நந்தினியின் நாடகம் தெரியுமா?

செல்வத்திடம் இருந்து அர்ச்சனாவை பிரிக்கிறேன் என்று சபதம் போட்டுள்ள நந்தினி கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடினாள். இப்போது அபார்சன் ஆகிவிட்டது அதுவும் அர்ச்சனாவால்தான் என்று இப்போது நாடகத்தை மாற்றி நடிக்கிறாள்.

அர்ச்சனாவை அடித்த செல்வம்

நந்தினி வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. உள்ளூரில்தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட அர்ச்சனா அவளுடைய வீட்டிற்குச் சென்று சண்டை போட்டு விட்டு வந்து விடுகிறாள். அவளை அடித்து விடுகின்றனர். இதை அப்படியே செல்வத்திடம் போட்டு கொடுத்துவிடுகிறாள் நந்தினி.

எனக்கு நந்தினிதான் முக்கியம்

இதைக் கேட்டு பொறுக்காத செல்வம் கோபத்தோடு வீட்டிற்கு வந்து அர்ச்சனாவை அடிக்கிறான். தனக்கு நந்தினிதான் முக்கியம். அவளால்தான் எல்லாம் கிடைத்தது உனக்கு இதற்கு தகுதியே இல்லை என்று கூறி அழவைக்கிறான்.

நல்ல பையனாதானே இருந்தான்?

செல்வம் தம்பி, மனைவி அர்ச்சனா பேச்சைக் கேட்டுக்கிட்டு அவ்ளோ நல்ல பையனா இருந்துச்சு. இப்ப அது நடந்துக்கறது வயித்தெரிச்சலா வருது. பாவம் அந்தப் பொண்ணு அர்ச்சனா... நிறைமாச கர்ப்பிணியா படாதபாடு படுறா. அந்த செல்வத்தைப் பார்த்தா நறுக்குனு நாலு கேள்வி கேட்கணும்! என்று பெண்கள் புலம்பத் தொடங்கி விட்டனராம்.

சுற்றி வளைத்த பெண்கள்

இது போதாது என்று சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று செல்வத்தை(சஞ்சீவ்) சுற்றி வளைத்த பெண்கள், அர்ச்சனாவை அழவைக்காதே செல்வம், அவ நிறை மாத கர்ப்பிணி கண் கலங்க கூடாது என்று கூறினர். நந்தினி உன்னை ஏமாத்துறா, அவளை மறந்திடு, அவ வீட்டுக்குப் போகதே என்றும் மிரட்டினர்.

கண்ணீர் விட்ட பெண்கள்

நடப்பது சீரியல் சூட்டிங்தான் என்று தெரிந்தும் ஒரு பெண் அர்ச்சனாவின் நிலையை (!) நினைத்து கண் கலங்க ஆரம்பித்து விட்டார். உடனே செல்வம், இதெல்லாம் சூட்டிங்தான். என்னுடைய கதாபாத்திரத்தை நான் செய்கிறேன். எனக்கு இப்போதைக்கு எதுவும் தெரியாது. தெரியவரும்போது நந்தினியை விட்டுவிட்டு அர்ச்சனா சொல்வதை மட்டுமே கேட்பேன் என்று கூறி அவர்களை சமாதானப் படுத்தினார்.

திருந்த மாட்டீங்களா பெண்களே?

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில்தான் திரையில் வரும் காட்சியைக் கண்டு கண் கலங்கி, கதறி அழும் காட்சிகள் தியேட்டரில் நடக்கும். ஆனால் இந்த காலத்தில் சீரியலைப் பார்த்துவிட்டு சூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்று பெண்கள் மிரட்டியுள்ளனர். இது என்னைக்கு முடியப்போகுதோ தெரியலையே? டிஆர்பிஐ ஏத்துறதுக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வாங்களோ தெரியலையே?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top