புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கந்தையா ஜங்கரன் - திருநாவுக்கரசு ஜெகதீஸ்வரன் - கதிரமலை நந்தீசன் -குணசிங்கம்பாஸ்கரன்பணிப்புலத்தில் பெரும் சோகநாள் என்றால் அது 15.12.1984 அன்றுதான். திருநாவுக்கரசு ஜெகதீஸ்வரன் பணிப்புலம் அம்மன்கோயிலடி.குணசிங்கம்பாஸ்கரன் காலையடி. கதிரமலை நந்தீசன் பணிப்புலம் அம்மன்கோயிலடி. கந்தையா ஜங்கரன் பணிப்புலம் அம்மன்கோயிலடி.இவர்களது 28ஆம் ஆண்டு நினைவஞ்சலி.       அன்றும் அதற்க்கு இரண்டுநாட்கள் முன்னும் நமது ஊருக்கு வந்த சாபக்கேடான நாட்களாகும்.12.12.84 ஆம் ஆண்டு நமது ஊர் உட்பட பண்டத்தரிப்பு சித்தங்கேணி,வடக்கம்பிராய்,விகடோரியாகல்லூரி,பறாளாய்முருகன்ஆலயம்,திருவடிநிலை,மாதகல், பண்டத்தரிப்பு இதற்க்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 72 மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. இந்த தேடுதல் ஏன் ஏற்ப்பட்டது என்பது சகலரும் அறிந்த விடயம். இந்த தேடுதல்வேட்டையாகும்.முதல் நாள் சுமாரான தேடலாகவே அமைந்தது.இருந்தும் எமது ஊரைச்சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கொடுத்த தகவல்களின்படி நமது ஊருள் தஞ்சம் இருந்தவர்கள் பலர் தமது இடங்களை மாற்றிவிட்டனர். இருந்தும் சில பல்கலைக்கழக மாணவர்கள் இடம்மாறமுடியாமல் போனது.இரண்டாம் நாள் கடுமையாக தேடுதலும் கொலைகளும் அதிகரித்தநாளாகும்.அன்று தான் குணதிலகம் பாஸ்கரன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாக்கும் பணியில் ஓடியவர் மூட்டு சந்தைக்கு அருகில் இவருக்கு காலன் அருகில் வந்து சூடுபட்டார்.இவரை காயங்களுடன் பாதுகாக்கமுடியா நிலையாகும். இருந்தும் இவர் அன்றிரவு இவரது அண்ணர் இவரை பாதுகாக்க முயறச்சி செய்தும் இவர் மரணமாகிவிட்டார்.இதே நாள் தான் பறாளாய் முருகன் ஆலயத்தின் முன்றலில் நடந்த எதிர்மறை போராட்டத்தில் கந்தையா ஜங்கரன் அவர்களுக்கு சூடுபட்டது. இவர் காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டு முகாமில் வைத்தியம் கிடைக்காமல் இவர் மரணமானார்.இதே நாளில் எமது ஊரில் பல அயலூரவர்கள் இறந்தனர்.எமது அயல் கிராமத்தவர் பலரையும் எமது ஊர் நோக்கி நகர்த்தியவர்கள் அவர்கள் இடங்கள் தெரியாமை, மழைவெள்ளம், அவர்கள் பலர் காயங்களுடன் வைத்தியம் அற்று இறந்தவர்கள் பலர்.திருநாவுக்கரசு ஜெகதீஸ்வரன்,கதிரமலை நந்தீசன் இருவரும் மூன்றாம் நாள் அம்மன் கோயில் சுற்றாடலில் வைத்து சூடுபட்டு இறந்தனர்.இவர்கள் மட்டுமல்ல அன்று எமது ஊரில் 21 பேர்களுக்குமேல் உயிர்நீர்த்தனர் இதில் 4 இளைஞர்கள் எமது உறவுகள். இவர்கள் மரணித்து 28வருடங்கள்.இன்று இணைய வசதிகள் இருப்பதால் இவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஞாபகம் ஊட்டுகின்றேன். இவர்களை நண்பர்கள்,உறவுகள், ஊர்மக்கள் மறந்திருக்கமுடியாது. அந்த 15.12,84 அன்று காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரம்.சரியாக ஏழு மணிக்கு நான் கூறிய ஊர்கள் எல்லாமே மரண ஓலங்கள்.யார் இறந்தனர் என ஒவ்வொருவரும் தெரியாமல் அவரவர் உறவுகளை தேடும்படலம் ஒருபக்கம், இறந்தவர்கள் வீட்டில் மரணஒலம், காயப்பட்டவர்கள் தப்புவார்களா என்ற ஓலம்,கைதானோர் எங்கு என்ற கேள்விக்கு பதில் தெரியாதோர். காணாமல் போனவர் கிடைப்பாரா என்ற ஓலம். அவ்வளவு மக்களும் ஊரில் சில நாட்கள் நடைப்பிணங்களாகவே உலாவந்தனர்.இதன்விளைவே எமது ஊரவர் பலர் புலம்பெயர ஆரம்பித்தனர்.இவர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல இவர்களோடு ஏகாம்பரம் பார்த்திபன்,கந்தளாய் குமார் இன்னும் சிலர் பெயர்போட தகவல் என்னிடம் இல்லை இருந்தால் தரலாம்.இதேபோல் திருநாவுக்கரசு சிவானந்தம்.அனைத்து உறவுகளையும் நினைவுகூர்வதில் பெருமைப்படுகின்றேன்.இவர்களது ஞாபகங்கள் அடுத்த தலைமுறையினரிடமும் சேரவேண்டும் என்ற அவா. இவர்களுடன் வாழ்ந்த பொன்னான நாட்களை இணையத்தில் பகிர்ந்தால் ஊர் இளைஞர்களுக்கும் தெரிந்துகொள்ள ஏதுவாக அமையும்.    ஆக்கம் பண் த.பாலா
நன்றி-பண் த.பாலா அவர்களுக்கு
பணிபுலத்தை உலுக்கிய கொடூர நாட்கள் 11-12 -1984-தொடக்கம் -15-12-1984 நினைவுகூறுவோம் 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top