புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உண்மையை சொல்வதால் என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள் என்று நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். டைரக்டர் ராம நாராயணன், நடிகர் சந்தானம் இணைந்து தயாரிக்கும் படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. புதுமுகம் சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன்,
விஷாகா சிங் நடிக்கின்றனர். கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், சமீபகாலமாக விழாக்களை தவிர்த்து விடுகிறேன். மேடையில் உண்மையை பேசுகிறேன். அது வேறுவிதமாக பரவுகிறது. என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள். உண்மையை சொல்வதால் திமிர் பிடித்தவன் என்றால் சொல்லிக்கொண்டு போகட்டும். மன்மதன் படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார்.

 
கல்லூரி காட்சியில் என்னுடன் நடிக்க நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார். பிரபலமான காமெடியனை போடும்படி இணை இயக்குனர் கூறினார். சந்தானத்தை அறிமுகப்படுத்தலாம் என்றேன். உடனே அந்த இணை இயக்குனர், உனக்கு அறிவிருக்கா என்றார். ஆனாலும் சந்தானத்தைதான் போட வேண்டும் என்றதுடன், இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்பீர்கள் என்றேன். அது உண்மையானது. அந்த இணை இயக்குனர் ஒரு படம் இயக்கினார். அதில் சந்தானம் நடித்தார், என்றார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் சிம்பு ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top