புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எந்நேரத்திலும் இதயம் நின்று விடும் நிலையில், 2 வயது சிறுவன் உயிருக்காக போராடி கொண்டிருக்கிறான்.
பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற குழந்தை இதயக் கோளாறுடன் பிறந்தது.


இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலே பிறந்தது பெற்றோருக்கும், மருத்துவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு, மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.

அறுவை சிகிச்சை செய்து செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளதால், இக்குழந்தையின் இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

ஆனால் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என்ற நிலையில், குழந்தையின் கடைசி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு இதுதான் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குழந்தை உயிருடன் இருக்கும் வரை, நன்றாக பார்த்து கொள்வது தங்கள் கடமை எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top