புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஜிம் ஹக்கீம் கல்லூரி மாணவியை காதலிப்பது போல் நடித்து அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து, நிர்வாணப்படுத்தி செல்போனில் படம் பிடித்தது தற்போது வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த பிரபல
ரவுடி ஜிம் ஹக்கீம் மீது பெண்களை மயக்கி கடத்தி சென்று பலாத்காரம் செய்தல், ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு பெண்ணை கடத்தி சென்று சூலூரில் வைத்து பலாத்காரம் செய்தது, புலியகுளத்தில் தனது நண்பரை தூக்கு மாட்டி கொலை செய்தது உட்பட பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், ஜிம் ஹக்கீம் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து ஒரு கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததும், அப்பெண்ணை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது இக்காட்சிகள் அடங்கிய சிடி வெளியாகியிருப்பது கோவை மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கும்பலிடம் சிக்கிய கல்லூரி மாணவியை காதலிப்பது போல் ஜிம் ஹக்கீம் நடித்துள்ளான். பின்னர் ஒரு நாள் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மேன்சனுக்கு அழைத்து சென்று தங்கவைத்து பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் தனது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்வதற்கு உதவியுள்ளான். அனைவரும் சேர்ந்து அந்த மாணவியை கஞ்சா புகைக்க வைத்துள்ளனர். போதையில் மயங்கிய அப்பெண்ணை ஐந்து பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது, பின்னர் அப்பெண்ணை நிர்வாணப்படம் எடுத்துள்ளனர்.

வேறு ஒரு வழக்கு தொடர்பாக பின்னர் ஜிம் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர். அப்போது நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவி உட்பட வேறு சில கல்லூரி மாணவிகளையும் காதலிப்பது போல் ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு இதில் தொடர்புடையவர்களையும் போலீசார் கண்டுபிடித்தனர். அக்கும்பலை வேறு வழக்குகளில் பின்னர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது ஜிம் ஹக்கீம் தவிர மற்ற அனைவரும் சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டனர். இக்கும்பலை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜிம் ஹக்கீம் கும்பலால் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் கல்லூரி மாணவிகள்தான். படக்காட்சிகள் எப்படி வெளியானது என்பது விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top