புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் 11 பேரை கொடூரமாக கொலை செய்து, மாமிசத்தை விற்றவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவன் ஷய்யாங்மிங்(வயது 57).

இவன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கொலை செய்து, அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக போட்டுள்ளான்.

இதற்கும் மேலாக, கொலை செய்த நபர்களின் மாமிசத்தை நெருப்பு கோழி என ஏமாற்றி விற்றும் பணம் சம்பாதித்து வந்துள்ளான்.

இது போன்று 11 பேரை கொலை செய்த ஷய்யாங்மிங்கை பொலிசார் கைது செய்துள்ளனர், பின்னர் இவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top