புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் பிச்சை எடுத்து வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கொழும்பு- நீர்கொழும்பு புகையிரதத்தில் குறித்த பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண்ணைக் கைது செய்யும் போது அவரிடம் 1800ரூபாய் வரை இருந்ததாகவும், அப்பணம் ஒரு மணித்தியாலயத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணம் எனவும் புகையிரதத் திணைக்கள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது வயிற்றுப் பகுதியிலுள்ள கட்டியைக் காட்டி மக்களிடம் அனுதாபத்தினைப் பெற்றே பிச்சை எடுத்து வருவதாகவும் அவருக்கு இரண்டு பிள்ளைகளின் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் களனி விஹாரையில் போயா தினமொன்றில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top