புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பல ஆண்களைத் திருமணம் செய்து மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்ட கேரளப் பெண் ஷானாஸுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
கேரளாவைச் சேர்ந்தவர் ஷானாஸ். இவர் பல ஆண்களை மோசடியாக மணந்து பணம், பொருளை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நூற்றுக்கணக்கான ஆண்களை இவர் மோசடி செய்து விட்டதாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் புளியந்தோப்பு பிரசன்னா உள்பட நான்கு பேரை மட்டுமே இவர் மணந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தன. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் ஷானாஸ். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் அவருக்குத் தற்போது குழந்தை பிறந்துள்ளது. அழகான பெண் குழந்தையை அவர் பெற்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஷானாஸ் கூறுகையில், இப்போது எனக்கு தங்குவதற்கு இடம் கூட இல்லை. எனது தோழியின் வீட்டில்தான் தங்கியுள்ளேன். எனது கணவர் பிரசன்னாதான், இந்தக் குழந்தைக்குத் தந்தை. அவர் என்னை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளேன்.

நான் 50 பேரைத் திருமணம் செய்ததாக கூறிய தகவலை அவர் காரணமாக கூறி என்னை ஏற்க மறுக்கிறார். ஆனால் அது உண்மையல்ல, நான் 50 பேரை மணக்கவில்லை. இது சத்தியம். இதை அவருக்குப் புரிய வைத்து அவருடன் சேர்ந்து வாழ்வேன். அது முடியாவிட்டால் நானும், எனது குழந்தையும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார் சோகத்துடன்
 
Top