உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்ட திட்டங்களின் கீழ் மன்னர் ஆட்சி நடைபெற்று
வருகிறது.
ஆணும் பெண்ணும் தனியாக சந்தித்து பேசுவது, பழகுவது போன்ற செயல்கள் அந்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் சவுதியில் உள்ள பெண்கள் உள்ளாடை விற்பனை மையங்களில் வேலை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டு, சவுதி பெண்களை பணியமர்த்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
தற்போது, சவுதி அரேபியாவில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் எல்லா இடங்களிளும் 5 அடிக்கு மேற்பட்ட உயரமான தடுப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடங்களில் ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக வந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சவுதி தொழிலாளர்கள் நல மந்திரி அப்டெல் பகி தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக