புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட யுவதிக்கு சிகிச்சையின் பின் கை அகற்றப்பட்டமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு
பல்கலைக்கழகத்தின்
சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் குறித்த மாணவிக்கு கையை அகற்றும் அளவிற்கு முறிவு ஏற்படவில்லை என அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

 படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட தனது தங்கையை கடந்த 17ம் திகதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். 17-18ம் திகதி பகல் வரையும் தங்கைக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

18ம் திகதி மாலை தங்கையின் கைக்கு பெண்டேஜ் போடப்பட்டு 19ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கையின் கை வெட்டி அகற்றப்பட்டவரை தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என சகோதரர் கவலை வெளியிட்டுள்ளார். முறிவு ஏற்பட்ட இடம் பழுதாகிவிட்டதாக கூறி, கை வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் அதனால் தனது தங்கை தற்போது எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பி, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் எக்ஸ்ரே ஒன்றுகூட எடுக்கப்படவில்லை எனவும் வலி என்று கூறியதால் பெண்டேஜ் மாத்திரமே போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்டேஜ் போட்டபின் வலி என்று கூடியதும் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டதாக நண்பி தெரிவித்துள்ளார்.

கையில், மணிக்கட்டு – முழங்கைக்கு இடைப்பட்ட பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதால் முழங்கைக்கு மேல் கை வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த நண்பி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுவிடயம் குறித்து மாத்தறை வைத்தியசாலையின் பணிப்பாளர் சமிந்தி சமரகோனிடம் அத தெரண வினவியபோது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவரது கை வெட்டி அகற்றப்பட்டுள்ள விடயத்தை தான் அறிந்ததாகவும் சிசிச்சை அளித்த வைத்தியர், தாதியர் குறித்து ஆராய முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என அவர் குறிப்பிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top