புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல் காரணமாக குடல், உறுப்புகள் வெடித்து மற்றும் மலம் இருக்கியதால் பிலியந்தலையைச் சேர்ந்த ஓன்றரை வயது கைக்குழந்தை மரணமடைந்துள்ளதாக களுபோவில
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தந்தையின் கொடூரமான தாக்குதலினால் ஒன்றை வயது குழந்தை நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளதுடன். குழந்தையின் தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கைக்குழந்தையின் சடலத்தை பாட்டியிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதேவேளை குழந்தையின் மரணத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாயை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top