புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04ம் திகதி பிறப்பித்தது.


ஆனால் குறித்த பெண் இருக்கின்ற இடத்தையோ இன்றேல் அவருடைய நிரந்தர முகவரியையோ தம்மால் தேடியறிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று திங்கட்கிழமை கொண்டு வந்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் அவர் நாட்டைவிட்டு தப்பிச் சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்தது.

அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யவேண்டுமாயின் பிடியாணையின் பிரதியை விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்குமாறு நீதவான் கேட்டுக்கொண்டார்.

சந்தேக நபர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நாகபாம்பு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் கடந்த 04ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 5ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top