புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும்
பொலிசார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.
ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டதுடன் பல்வேறு பிரதிநிதிகளும் நிறுத்தப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top