புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா-ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை என்ற இடத்தில் அண்மையில் ஒரு கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் ஈரோட்டில்
வசிக்கும் கந்தசாமி என்பவரது வீட்டியையே இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த கந்தசாமி தான் பத்து வருடங்களாக ஆடு வளர்பில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை இப்படி ஒரு விசித்திர சம்பவத்தினை நான் நேரில் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டார்.

இவர் வளர்த்த பெண் ஆடு ஈன்ற இரண்டு குட்டிகளில் ஒன்றுக்கே இவ்வாறு நெற்றிக்கு கீழே ஒரே ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது. அதாவது நெற்றிக்கண் என்றாலும் இது பொருந்தும் அல்லவா.?

இச்சம்பவம் பற்றி கோயம்புத்தூரை சேர்ந்த மிருக வைத்தியத்துறையை சேர்ந்த டாக்கடர் அசோகன் குறிப்பிடுகையில் கிராமங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவது மிக மிக அரிதான ஒன்று. எனினும் இச்சம்பவம் மரபணு குறைபாட்டினால் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top