புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில்
தெரிவித்திருந்த நிலையில் பம்பலப்பிட்டியில் வைத்து குறித்த பெண்ணை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அந்த பெண்ணை கொழும்பு கோட்டை நீதிமன்றதில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் இந்தப் பெண் கடந்த 04 ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் அன்று பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் அவர் இருக்கின்ற இடத்தையோ இன்றேல் அவருடைய நிரந்தர முகவரியையோ தம்மால் தேடியறிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு நேற்று திங்கட்கிழமை கொண்டுவந்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யவேண்டுமாயின் பிடியாணையின் பிரதியை விமானநிலைய பொலிஸாரிடம் கையளிக்குமாறு நீதவான் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையிலேயே கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த பெண்ணை பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இரவு விடுதி ஒன்றில் நாகபாம்பு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் கடந்த 04ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
Top