புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொலிவுட்டில் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்த நடிகை நீபா, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார்.

இவர் பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நீபாவுக்கும் வேலூரை சேர்ந்த கட்டுமான தொழில் செய்யும் சிவக்குமாருக்கும் திருமணம் நிச்சயமானது.

நீபா-சிவக்குமார் திருமணம் இன்று காலை சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி பிரசன்ன மகாலில் நடந்தது.

வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத நீபா கழுத்தில் சிவக்குமார் தாலி கட்டினார். நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகினர் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே மண்டபத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top