புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியைச் சேர்ந்த நகைத்திருடன் ஒருவனை அவுஸ்திரேலியாவில் கைது செய்து தாய்லாந்திலுள்ள சுவர்ண பூமி விமான நிலையத்தில் விமானத்திற்காகக் காத்திருந்தபோது
அத்திருடன் தப்பித்து விட்டதாக அஸ்திரேலியாவின் புலம்பெயர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தாய்லாந்தின் ஊடகங்கள், கார்லோ கான்ஸ்ட்டன்டைன் கோல்(Carlo Konstantin Kohl)(25) என்ற கைதி பொலிசார் கண்ணயர்ந்த நேரம் பார்த்து தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் வெளியிட்டன.

கோல் மிகுந்த நவரத்தினத் திருட்டு, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சொந்த நாடான ஜேர்மனிக்குக் கொண்டு வரப்பட்டபொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top