புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மலையாளத்தின் முன்னணி நடிகை காவ்யா மாதவன். மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரம் திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகியவர் சில
மாதங்களிலேயே திருமண வாழ்வில் கசப்புற்று மீண்டும் சினிமாவுக்கு வந்தார். டீன் ஏ‌ஜ் பையனுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

இவர் ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை மறுத்திருக்கும் காவ்யா மாதவன், ஒருபோதும் பாலியல் தொழிலாளியாக நடிக்க மாட்டேன் என்று தெ‌ரிவித்துள்ளார். அதற்கு அவர் கூறியிருக்கும் காரணம் அதிர்ச்சியானது.

மலையாளத்தில் முன்னணி நடிகைகளும் பாலியல் தொழிலாளி போன்ற விளிம்புநிலை மனிதர்களின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுக்கு கதாபாத்திரமே முக்கியம், இமே‌ஜ் அல்ல.

இயக்குனர் பரதனின் மனைவியும் நடிகையுமான கே.பி.எஸ்.லலிதா போன்றவர்களே பாலியல் தொழிலாளி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதாரணம் சதையம். இந்நிலையில் பாலியல் தொழிலாளி போன்ற கதாபாத்திரங்களில் கொச்சையான வார்த்தைகள் பேசி ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று காவ்யா மாதவன் கூறியிருப்பது கேரளாவில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நடிப்பை நடிப்பாக பார்க்காமல் இதென்ன கூத்து என ரசிகர்ளே கூறி வருகின்றனர்.

காவ்யாவுக்கு இது தேவையா?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top