புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலக அளவில் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் (Cervical Cancer) வரக்கூடிய பெண்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகத்தை குறைக்கவல்லதாகக் கருதப்படும் எளிதான,
விலை மலிவான, சட்டென செய்யக்கூடிய பரிசோதனை முறை ஒன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஏழை நாடுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அனாவசியமாக உயிரிழப்பதைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

கர்ப்பப் பை வாயில் இருந்து சிறிது திரவத்தை எடுத்து, அதனை நீர் கலந்த வினிகரில் அதாவது காடியில் விட்டு, இயல்புக்கு மாறான உயிரணுக்கள் அதில் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாக இந்த முறை அமைந்துள்ளது

மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் இருக்கின்ற கருவிகளின் உதவி இன்றியே இந்த பரிசோதனையை செய்ய முடியும்.

உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பரிசோதனை முறையை அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்துவரும் புற்றுநோய் மாநாடு ஆராய்ந்து வருகிறது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top