புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த சிங்கம்-2 படத்தினை தமிழிலும், தெலுங்கில் 'யாமுடு-2' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து சூர்யாவும், அனுஷ்காவும் ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

சூர்யா கூறும்போது,  ஆந்திராவில் எனது படங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக சிங்கம்-2 தயாராகியுள்ளது.

அந்திராவில் இப்படம் 'யாமுடு-2' என்ற பெயரில் வருகிறது. பொலிஸ் அதிகாரி பற்றிய கதை. இப்படத்தை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் பலர் பாராட்டியுள்ளனர் என்றார்.

அனுஷ்கா கூறும்போது, ''சூர்யா சிறந்த நடிகர் அவருக்கு ஜோடியாக நடித்தது மகிழ்ச்சி'' என்றார். பின்னர் சூர்யா கேரளா சென்று அங்கும் 'சிங்கம்-2' படத்தை விளம்பரபடுத்தினார். அப்போது நிருபர்களிடம் கூறும்போது, ''சிறந்த கதை அமைந்தால் மலையாள படத்தில் நடிப்பேன்'' என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top