புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை ஒன்று சாணம் போட்டது. எருமை சாணம் போட்டதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். எருமை
சாணத்துடன் செல்போன் ஒன்றும் வெளியில் வந்து விழுந்தது.

பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வர தொட்டகாரா. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாட்டு தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராமல், இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் வீட்டில் செல்போனை தேடியுள்ளார். அது கிடைக்கவில்லை. உடனடியாக வேறு செல்போன் மூலம் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ரிங்டோன் மட்டும் சத்தம் குறைவாக கேட்டுள்ளது.

நாள் முழுவதும் தேடியும் செல்போன் கிடைக்காததால், வேறு செல்போன் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையில் நேற்று வழக்கம் போல், மாட்டு தொழுவத்திற்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, தொழுவத்தில் இருந்த எருமை ஒன்று சாணம் போட்டது.

அதை சேகரிப்பதற்காக கையில் அள்ளியபோது, அதனுடன் செல்போன் வந்துள்ளது. அதை கழுவி பார்த்தபோது, 7 மிஸ்டு கால்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதை பார்த்து ஈஸ்வர தொட்டகார ஆச்சரியத்தில் மூழ்கினார்.

பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருந்த செல்போனை தீவணத்துடன் சேர்த்து எருமை தின்றுள்ளது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் ஒரு நாள் முழுவதும் எருமையின் வயிற்றில் இருந்தும், தண்ணீர் உள்ளே செல்லாமல், செல்போன் நன்றாக இயங்கியது தான். இதை அதிசயத்துடன் கிராமத்தினரிடம் காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விவசாயி. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top