புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொது மக்கள் பிரயாணிக்கும் பஸ் வண்டிகளுள் தவறான விதத்தில் நடந்து கொண்டதாக 19 இளம் காதல் ஜோடிகள் மாத்தளை வலய குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஸ்ஸில் பயணிப்பவர்கள் போல் போலி வேஷம் தரித்த பொலிஸார்களினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி இக் காதல் ஜோடியினர் அவ் வகுப்புக்ககளுக்குச் செல்லாது மாத்தளையிலிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து மாத்தளைக்கு வருவதும் போவதுமாக பஸ்சில் இவ்வாறு தவறான விதத்தில் செயற்பட்ட வேளை இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலை, பண்டாரவளை மற்றும் கலேவல பகுதிகளில் வசிப்பவர்களாகும் என்பது தெரியவந்துள்ளது.


மாத்தளை வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியேகட்சர் திலக் அபேசிறிவர்தன அவரின் அறிவுறத்தலுக்கிணங்க இத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top