புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 1979ல் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதி பின்பற்றப்பட்டு வந்தது.
தற்போது அதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் விருப்பத்தின் பேரில் குழந்தை வேண்டாம் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை நெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சேவை அமைப்பு ஒன்று தகவல் தருகிறது.

மேலும் சுதந்திரமாக இருப்பதற்கு குழந்தை தேவை இல்லை என்ற கருத்து பெரும்பாலான இளம் பெண்களிடம் காணப்படுவதாக பெண்கள் அமைப்பு கூறுகிறது.

இந்த திட்டத்திற்காக 30 சீன பெண்கள் அமைப்பும், 57 பெண்கள் மேம்பாட்டு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன. சீனாவில் சராசரியாக 75 வயது வரை உயிர்வாழ்வதாகவும், ஆண்களை விட இரண்டு, மூன்று ஆண்டுகள் பெண்கள் அதிகமாக வாழ்வது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top