புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம்
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பழச்சாறு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது.

குறிப்பாக டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top