புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலி கடலில் நீந்திச்சென்று காணாமல் போன வெளிநாட்டவர் ஒருவரைத் தேடும் நடவடிக்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.மற்றுமொரு வெளிநாட்டவரான பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்தே இந்த வெளிநாட்டவர் கடலில் குதித்து நீந்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தை நேரில் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டவருக்குச் சொந்தமான மடிக்கணினி உள்ளிட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் அவ்விடத்திலிருந்து மீட்டுள்ளனர்.

வெளிநாட்டவருடன் இருந்தாக கூறப்படும் பெண் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top