புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கரகூரைச் சேர்ந்த முருகனின் மகன் சத்தியமூர்த்தி (23). கோட்டூரைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் மணிமேகலை (20). மணிமேகலையும், சத்தியமூர்த்தியும் காதலித்துள்ளனர். இதையறிந்த குமரவேல், சத்தியமூர்த்தியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி சத்தியமூர்த்தி திடீரென மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் அங்குள்ள மாந்தோப்பில் தூக்கில் சடலமாக தொங்கினார். சத்தியமூர்த்தி தற்கொலைக்கு குமரவேல் குடும்பத்தினர்தான் காரணம் என முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து குமரவேல், அவரது மனைவி லதாவை நேற்று கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top