புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டு உபயோகத்தில் இருக்கின்றது. ஆனால், இப்பொழுது நாம் பயன்படுத்தும் பூட்டை 150 வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தனர். 1817ஆம் ஆண்டு யாராலும் திறக்க முடியாத பூட்டை வடிவமைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட ஜெரிமயா சப் என்பவர் அது மாதிரி ஒரு பூட்டை உருவாக்கினார்.

பூட்டை உடைத்துத் திருடி சிறையில் இருக்கின்ற ஒரு திருடனைக் கொண்டு அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து விட்டால் அவனுக்கு விடுதலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாட்களுக்கு மேல் முயற்சி செய்தும் அவனால் பூட்டை உடைக்க முடியவில்லை. அவனால் மட்டுமல்ல, இதுவரைக்கும் யாராலும் அந்தப் பூட்டை உடைத்துத் திறக்க முடியவில்லை. இருந்தாலும் இது போன்ற பூட்டுக்களை யாரும் பயன்படுத்தவில்லை. காரணம் ஒருவேளை திறப்பு தொலைந்து விட்டால் எப்படித் திறப்பது என்ற பயம் தான்.

நாம் தற்போது பயன்படுத்தும் பூட்டைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த லினஸ் யேல். 1861ஆம் ஆண்டிலிருந்து இவர் கண்டுபிடித்த பூட்டு மாதிரியைத் தான் இதுவரைக்கும் நாம் உபயோகப்படுத்தி வருகின்றோம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top