புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் இரவு நேரத்தில் விபச்சாரம் நடாத்தப்பட்டு வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பகல் நேரங்களில் சிறுபிள்ளைகளைக் காண்பித்துத் தனது வறுமை
நிலைமையைக் கூறி பிச்சை எடுத்து பிழைப்பதுடன், இரவு நேரத்;தில் மேலதிக பணத்தை ஈட்டிக் கொள்வதற்காக பெற்ற பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிச்சைக்காக கூட்டிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு அரச திணைக்களங்களும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிச்சையெடுக்கும் சிறுவர்களின் வீதம் அதிகரித்து வருவதாக சிறுவர் அபிவிருத்தி அமைப்பு (சீ.டி.ஓ) தெரிவித்திருந்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top