புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பு - வெள்ளவத்தை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் தனது தாயாருடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 8 சிறுவன் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளான். அத்துடன் இந்த விபத்தில் தாய் படுகாயமடைந்துள்ளார்.வெள்ளவத்தை
பள்ளிவாசலுக்கு முன்னாள் உள்ள வீதிக்கருகில் குறித்த சிறுவன் தாயுடன் இருந்த வேளை வேகமாக வந்த 'பிக்கப்' வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியதனால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அரூஸ் அகமட்(வயது 8) என்ற சிறுவனே பலியாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தை அடுத்து வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top