புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொலன்நறுவை பலதிசி கல்வியற் கல்லூரி சிங்கள மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கட்டமொன்றிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்துள்ளார்.கல்வியற் கல்லூரி கட்டடத்தின் இரண்டாம் மாடியிலிருந்து இந்த மாணவி இன்று அதிகாலை கீழே
குதித்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சரத் சில்வா கூறினார்.

படுகாயமடைந்த மாணவி பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் தோல்வியே இவரின் தற்கொலை முயற்ச்சிக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக் பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top