புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீதிமன்றில் 15,000 ரூபா குற்றப் பணம் செலுத்தியுள்ளார்.புதிய துவிச்சக்கரவண்டி ஒன்றை வாங்கிக்கொடுக்க பெற்றோர் மறுத்ததனாலேயே இந்த மாணவன் அரலிவிதை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அரலிவிதையை உட்கொண்ட பின்னர், குறித்த மாணவன் நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்ற சமயம், மயக்கம் அடைந்து வீதியில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த வீதியால் சென்றவர்கள் மாணவனை உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த குற்றத்திற்காக, நீதிமன்றில் 15,000 ரூபா பணத்தை குற்றப் பணமாக செலுத்தியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top