புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா தயாரித்துள்ள 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது இந்திய படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த
ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று மாலை 7 மணிக்கு சோதனை செய்யப்படுகிறது.

இந்த சோதனையின்போது இராணுவ அதிகாரிகளும், ஏவுகணையை உருவாக்க உதவியாக இருந்த பிற அமைப்பினரும் உடன் இருப்பார்கள்.

இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top