புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தந்தையை தீயிட்டு எரித்துக் கொன்றது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியைச் சேர்ந்தவர் Osnabrück(வயது 41). இவரும், இவரது தந்தையும் ஒன்றாக வசித்து வந்தனர். இவரது தந்தை ஒரு இதயநோயாளி,
ஓய்வூதியம் பெற்று வருகிறார்.Osnabrückகின்
கணவருக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால், பணப்பிரச்னை அதிகளவு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தன் தந்தை கொலை செய்து விட்டு, அவர் வாங்கும் ஓய்வூதிய பணத்தை பெற முடிவு செய்தார்.

இதனையடுத்து தனது தந்தைக்கு ஈஸ்டர் தினத்தன்று அதிகளவு ஆல்கஹால் கொண்ட மதுவை கொடுத்து கொலை செய்துள்ளார். இதன் பின் இவரது உடலை தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளார்.

மேலும் இவரது ஓய்வுதிய பணத்தை, தனது தந்தை போல் போலியாக கையெழுத்து இட்டு வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் மேல் சந்தேகம் கொண்ட Osnabrück தங்கை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. எனவே நீதிமன்றம் இவருக்கு 800 யூரோ அபராதமும், 15 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top