புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சகோதரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்காரராக உள்ளார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட் அணிவதை வழக்கமாகக்
கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.

ஆனால் அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாள்களுக்கு முன்பு எச்சரித்துள்ளார்.

இதையடுத்து சகோதரரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சதாரா காவல் நிலையத்தில் நஜ்மா புகார் செய்துள்ளார்.

ஆனால் காவல் துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வீட்டை விட்டு வெளியில் சென்ற நஜ்மாவை பின்தொடர்ந்த அலி, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அலியை தீவிரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top