புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு நீதிமன்றத்துக்கு அண்மையில் விசித்திரமான காதல் வழக்கு ஒன்று வந்தது. கொழும்பில் உள்ள பிரபல கலவன் பாடசாலை ஒன்றில் உயர் தரம் படிக்கின்ற 17 வயது மாணவன் ஒருவர் அதே பாடாசாலையில் சாதாரண தரம் படிக்கின்ற 15 வயது மாணவி ஒருவருடன் எஸ். எம். எஸ் மூலம் ஆரம்பத்தில் காதல் தொடர்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
இவர்கள் பாடசாலையில் அடிக்கடி சந்தித்துப் பேசி காதலை வளர்த்துக் கொண்டனர். ஆனால் பாடசாலை விமுறை விட்ட பிற்பாடு சந்திக்கின்றமைக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
இக்காதல் குறிந்து அறிந்து கொண்ட மாணவியின் பெற்றோர் சந்திப்புக்கான வேறு மார்க்கங்களையும் இல்லாமல் செய்து விட்டனர்.இதனால் மாணவி ஒரேயடியாக ஏக்கம் அடைந்து விட்டார்.
மாணவிக்கும் இந்த யோசனை ரொம்பவே பிடித்துப் போய் இருந்தது. எனவே இதற்கான ஏற்பாடுகளை வீட்டில் முன்னதாக செய்து கொண்டார். படுக்கை அறையின் ஜன்னல் கதவை அகற்றினார்.
காதலியின் வீட்டுத் தோட்டத்தில் வந்து மறைந்து நின்றார் மாணவன். மாணவி காதலனை தோட்டத்தில் போய் பார்த்தார்.
மாணவிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கின்ற பழக்கம் நெடுநாளாக இருந்து வந்திருக்கின்றது. எனவே மகளின் நடமாட்டத்தில் பெற்றோர் சந்தேகப்படவே இல்லை.
ஆனால் நள்ளிரவில் மாணவியின் அறைக்குள் இருந்து பெரிய சத்தம் கேட்டது. மகள் ஏதோ ஆபத்தில் இருக்கின்றார் என பெற்றோர் நினைத்து விட்டனர். மகளின் அறை பூட்டப்பட்டு இருக்க பகீரத முயற்சிகள் செய்து அறையை திறந்தார் தகப்பன்.
உள்ளே கண்ட காட்சி தகப்பனை பேரதிர்ச்சிப்பட வைத்தது. கட்டில் முறிந்து காணப்பட்டது. முழு நிர்வாண கோலத்தில் கட்டில் சட்டங்களுக்கு இடையில் அகப்பட்டு மீள முடியாத நிலையில் மகள் காணப்பட்டார்.
கள்ளன்… கள்ளன் என்று சத்தமிட தொடங்கினார் தகப்பன்.
“ அப்பா கள்ளன் யாரும் வரவில்லை, எனது காதலன்தான் வந்திருக்கின்றார், தயவு செய்து என் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம். ”
இவ்வாறு தகப்பனிடம் சொன்னார் மகள். இந்நேரம் அறைக்குள் அலுமாரி ஓரத்துக்குள் மறையலானார் மாணவன்.
மாணவியின் பெற்றோர் மெல்ல விடயத்தை உணர்ந்து கொண்டனர். மகளின் காதலனை பிடித்து முல்லேரியா பொலிஸில் கையளித்தனர். வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்தமையுடன் தவறாக நடந்தும் கொண்டார் என்று மாணவன் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
மாணவன் 15000 ரூபாய் பிணையில் கொழும்பு நீதிமன்றத்தால் வெளியில் விடப்பட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top