புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தக்கலையை அடுத்த குமாரபுரம் சரல் விளையை சேர்ந்தவர் ஜான் சுரேஷ் (29). இவரது மனைவி சகாய சுஜா (22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் சிஜோ என்ற ஆண் குழந்தை உள்ளது.

மனைவி சகாயசுஜாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஜான் சுரேஸ் அடிக்கடி மனைவியை அடித்து உதைத்தார். சனிக்கிழமையன்றும் இதேபோல் சண்டை ஏற்படவே அரிவாளால் எடுத்து சுஜாதாவை வெட்டினார். இதில் சகாய சுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். குழந்தையும் வெட்டுப்பட்டதில் படுகாயம் ஏற்பட்டது.

மனைவியை கொலை செய்த ஜான் சுரேஸ் தலைமறைவாகிவிட்டார். கொலை தொடர்பாக கொற்றியோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து சகாய சுஜாவின் சடலைத்தை கொண்டு வந்து கணவன் வீடு முன்பு புதைக்கப்போவதாக சகாய சுஜாவின் உறவினர்கள் கூறினர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சகாய சுஜாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஜான் சுரேசின் சொத்தில் ஒரு பகுதியை அவரது குழந்தையின் பெயரில் பதிவு செய்து கொடுப்பதாக ஜான் சுரேசின் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இன்று காலை சகாய சுஜாவின் உடல் அடக்கம் நடக்க இருந்த நிலையில் ரப்பர் தோட்டத்தில் ஒரு பிணம் கிடப்பதாக கொற்றியோடு போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடப்பது ஜான் சுரேஷ் என்பது தெரியவந்தது.

மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய ஜான் சுரேஷ் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து ரப்பர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கணவன் – மனைவி இருவரின் உடலையும் ஒரே இடத்தில் புதைக்க அவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top