புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் அரச வங்கிகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை இரசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செயய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும்
மானிப்பாயைச் சேர்ந்தவர்களென பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபர்கள் இருவரும், சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் பெயரைக் கூறி, வங்கிகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் இரு சகோதரர்களிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஐந்து லட்சம் ரூபா பணத்தையும் சந்தேக நபர்கள் கோரியுள்ளனர்.

இரு சகோதரர்களுக்குச் குறித்த நபர்கள் மீது சந்தேகம் ஏற்படவே, அவர்கள் யாழ். மாவட்ட அமைப்பாளரின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டனர். இதன்போதே அவர்கள் மோசடி வேலையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

உடனடியாக இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில்,  சந்தேகநபர்களிடம் பணத்தைக் கொடுப்பது பொன்று நடித்துள்ளனர்.

பணத்தினைக் கொடுக்கும் போது, இரகசியப் பொலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து. இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top