புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அஜீத்தின் முகவரி, சிம்புவின் ‌தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி போன்ற படங்களை இயக்கிய வி.இசட்
துரை சிறு இடைவெளிக்கு பிறகு ஷாம்மை வைத்து இயக்கியுள்ள படம் 6. பூனம் கவுர் நாயகியாக

நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் டைரக்டர்
அமீர், நான் ஈ சுதீப், நடிகர்கள் அப்பாஸ், உதயா, எழுத்தாளர் ஜெயமோகன், நடிகைகள் நமீதா,
விமலாராமன் உள்ளிட்ட திரை வி.ஐ.பி.க்களுடன் நடிகை சினேகாவும் பங்கேற்றார். விழா மேடையில்
இருப்பவர்களை தவிர்த்து கீழே அமர்ந்திருந்த அனைவரது கண்களும், கருத்துகளும் சினேகாவின்
கழுத்திலேயே இருந்தது. ஷாம் நெருங்கிய நண்பர் என்பதால் 6 பட ஆடியோ விழாவில் பங்கேற்ற நடிகை
சினேகா, கழுத்தில் தாலி அணியாமல் வந்திருந்தது தான் காரணம். முன்பெல்லாம் திருமணமான
நடிகைகள் படத்தில் அவர்களது நடிப்பு கேரக்டருக்கு ஏற்றவாறு, தங்களது தாலியை அவர்கள் அணிந்து
இருக்கும் உடைக்கு ஏற்றவாறு உடைக்குள் மறைத்து கொள்வது வழக்கம். ஆனால் ஒரு விழாவுக்கு
விருந்தினராக வந்திருந்த சினேகா தாலியை கழட்டி வைத்துவிட்டு(உடைக்குள் மறைத்த மாதிரி தெரியவில்லை
) வந்திருந்தது ஆச்சர்யம்! மெல்லிய செயின் மட்டுமே அணிந்து வந்திருந்த சினேகா, அதைப்பற்றி அருகில்
அமர்ந்திருந்த விமலாராமனிடம் ஏதோ வியத்தகு விஷயமாக விளக்கி கொண்டு இருந்தது உண்மை!

கணவர் பிரசன்னாவோ, சினேகா தன் மனைவியாக கிடைத்தது தன் பரம்பரை செய்த பாக்கியம் என
மேடைதோறும் முழங்கி வர., சினேகாவோ தாலி இல்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது என்ன
நியாமோ.? நாகரிகமோ..?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top